புதிதாக ஏற்படுத்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்

 

கோவை, செப். 30: கோவை மாநகரில் உக்கடம், பீளமேடு, காட்டூர், போத்தனூர், குனியமுத்தூர், சிங்காநல்லூர், ரேஸ்கோர்ஸ் உள்பட 15 போலீஸ் நிலையங்கள் இருந்தன. இந்நிலையில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புகடை ஆகிய 3 புதிய போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.  இதுதவிர துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்கள் மாநகரத்துடன் இணைக்கப்பட்டது.

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புகடை ஆகிய போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு தேவையான வாகனங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கரும்புகடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தலா ஒரு கார் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தலா 2 மோட்டார் சைக்கிள் வீதம் 6 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போலீசாருக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கினார்.

The post புதிதாக ஏற்படுத்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் appeared first on Dinakaran.

Related Stories: