அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7வது முறையாக நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கில் ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செப்டம்பர் 29 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7வது முறையாக நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: