இந்நிலையில், நேற்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7வது முறையாக நீட்டிப்பு appeared first on Dinakaran.
