கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசா வாலிபர் கைது

 

மதுக்கரை,செப்.29: கோவை ஈச்சனாரி எல் அன்ட் டி பைபாஸ் ரோடு சந்திப்பு பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மதுக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுக்கரை எஸ்.ஐ. செந்தில்குமார் தலைமையில் மாறுவேடத்தில் அங்கு சென்ற போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்குள்ள பேக்கரி பின்புறம் சந்தேகத்திடமாக நின்று கொண்டிருந்த நபரை அழைத்து சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் இருந்தது தெரிய வந்தது.இதனைத்தொடர்ந்து அவனை காவல்நிலையதிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியை சேர்ந்த யுதிஸ்தார் என்பவரின் மகன் பிரசன்ன பிஸ்வால் என்பதும், இவர் மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு வடமாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவனை கைது செய்த போலீஸார் அவனிடமிருந்த 1.250 கிலோ கஞ்சா மற்றும் 750 கிராம் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசா வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.