புதுச்சேரி: புதுச்சேரியில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் தங்களது உடைமைகள், கால்நடைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். நெட்டப்பாக்கம், வடுகுப்பம், மணமேடு, குருவி நத்தம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டிருக்கிறார்.
The post புதுச்சேரியில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.
