மேட்டுப்பாளையத்தில் சாலை சீரமைப்பு பணி தீவிரம்

மேட்டுப்பாளையம்,செப்.28: மேட்டுப்பாளையம் யுபிஎல் ரயில்வே கேட் பகுதியில் இருந்து உப்பு பள்ளம் வரை பழுதான சாலையை சீரமைத்து தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது.பகுதான புழுதி பறக்கும் சாலை குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மெஹரீபாபர்வீன் அஷ்ரப் அலி, துணைத்தலைவர் அருள்வடிவு முனுசாமி, நகராட்சி கமிஷனர் அமுதா,பொறியாளர் சுகந்தி உள்ளிட்டோர் அச்சாலையை நேரில் ஆய்வு செய்து உடனடியாக தார் சாலையை அமைக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து யுபிஎல் ரயில்வே கேட் முதல் உப்பு பள்ளம் வரை தார் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.

இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாபர் கூறுகையில்: மேட்டுப்பாளையம் யுபிஎல் ரயில்வே கேட் பகுதியில் இருந்து உப்பு பள்ளம் வரை செல்லும் சாலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் நகராட்சியின் சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்றன.இதில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்தும், திருப்பூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் அடிக்கடி லீக்கேஜ்கள் ஏற்பட்ட காரணத்தால் இச்சாலை போட முடியாமல் இருந்து வந்தது. இதனால் இச்சாலையில் புழுதிப்புயல் கிளம்பி பொதுமக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி வந்ததோடு,வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் தற்போது தார் சாலை அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக இப்பகுதி பொதுமக்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

The post மேட்டுப்பாளையத்தில் சாலை சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.