அதன்படி புரட்டாசி மாத பௌர்ணமியானது, வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வருகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 29-ம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12.05-க்கு திருவண்ணாமலை சென்றடையும். 30-ம் தேதி அதிகாலை 3.45-க்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், காலை 9.05-க்கு சென்னை வந்தடையும். பெளர்ணமி கிரிவலத்துக்காக இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்களும் வேலூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பெளர்ணமி கிரிவலம் எதிரொலி: சென்னை – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு.!! appeared first on Dinakaran.