இந்த சைட் மியூசியத்தினை சுற்றி பூங்கா மற்றும் புகைப்பட காட்சி அமைத்து உள்ளே வரும் தொல்லியல் ஆர்வலர்களை திருப்திபடுத்தும் வண்ணம் அமைத்து வருகிறோம் என்று கூறினார். எடுத்த பொருட்களை எடுத்த இடத்திலேயே காட்சிப்படுத்தும் சைட் தொழில்நுட்பத்தை கொண்டு ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட வரும் பள்ளி கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த திருநெல்வேலியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் அருங்காட்சி பற்றிய ஐயங்களை எழுத்தாளரிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.
The post தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள சைட் அருங்காட்சியகத்தைக் காண ஆர்வம் காட்டும் மாணவர்கள்..!! appeared first on Dinakaran.
