எஸ்.எஸ்.குளம் வேளாண்மை மையத்தில் சிறுதானிய விழிப்புணர்வு வாகனத்தை ஒன்றியக்குழு தலைவர் துவக்கி வைத்தார்

 

அன்னூர், செப்.26: உலகம் முழுவதும் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக எஸ்.எஸ்.குளம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தின் சார்பில் வேளாண்மை துறை துணை இயக்குனர் புனிதா (மத்திய திட்டம்) தலைமையில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனம் பிரச்சாரம் நேற்று துவங்கியது. இந்த வாகனத்தை எஸ்.எஸ்.குளம் ஒன்றியக்குழு சேர்மன் கவிதா சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பிரச்சார வாகனம் மூலம் வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் வெள்ளமடை, வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், கீரணத்தம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வறட்சி காலங்களில் சோளம், கம்பு, திணை, ராகி உள்ளிட்டவற்றை பயிரிடுவதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது. அதே சமயத்தில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவு, பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபமும் கிடைக்கும். மேலும், நார்ச்சத்துக்கள் அதிகமாக சிறு தானியங்களில் உள்ளதால் சர்க்கரை உள்ளிட்ட நோயாளிகளுக்கு உகந்தது என பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post எஸ்.எஸ்.குளம் வேளாண்மை மையத்தில் சிறுதானிய விழிப்புணர்வு வாகனத்தை ஒன்றியக்குழு தலைவர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.