கீழடி அகழாய்வு: செப்.30ல் நிறைவு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் 9ம் கட்ட அகழாய்வில் கோள வடிவிலான எடை கல், பாம்பு உருவ சுடுமண் பொம்மை உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. கொந்தகையில் 2 குழிகள் தோண்டப்பட்டு 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன அதில், 14 தாழிகள் திறக்கப்பட்டு எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், சுடுமண் கிண்ணம் உள்ளிட்ட பொருட்கள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணி வரும் 30ம் தேதி நிறைவடைகிறது. பத்தாம் கட்ட அகழாய்வு ஜனவரியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கீழடி அகழாய்வு: செப்.30ல் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: