சைக்கிள் தூய அகர்பத்தி ஜீரோ கார்பன் தூபம்

 

கோவை, செப். 23: சைக்கிள் தூய அகர்பத்தியின் 75 ஆண்டு கொண்டாட்டம் தொடர்பாக நிர்வாக இயக்குனர் அர்ஜூன் ரங்கா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மார்க்கையன்கோட்டையில் பிறந்த என் தாத்தா ரங்கா ராவ் சுயமாக தொழிலை கற்றுக்கொண்டு ஒரு பிராண்டை ஏற்படுத்தினார். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் அகர்பத்தியாக உள்ளது. தற்போது 75 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தயாரித்து வருகிறோம். உலகின் முதல் சான்றளிக்கப்பட்ட ஜீரோ கார்பன் தூபம் இது.

அகர்பத்தி மட்டுமின்றி ஓம் சாந்தி என்ற பெயரில் பூஜை சாமன்கள், குங்குமம், மஞ்சள் போன்றவை தயாரித்து விற்பனை செய்கிறோம். எங்கள் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் பெண்கள். தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளி இளம்பெண்களை ஆதரிக்கும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 5 ஆண்டு உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இது 12 முதல் 17 வயது வரையிலான சிறுமிகளுக்காக உருவாக்கப்பட்டது. பக்தர்களை தெய்வீகத்துடன் இணைக்கும் ஒரு ஊடகமாக சைக்கிள் தூய அகர்பதி மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சைக்கிள் தூய அகர்பத்தி ஜீரோ கார்பன் தூபம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.