2014, 2019களில் இதுபோன்ற கூட்டணி இல்லை. இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியால் குழப்பம் என்பது தவறான தகவல். பா.ஜ. தலைவரான அண்ணாமலைக்கு ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கான குறைந்தபட்ச தகுதிகூட இல்லை. அவர் ஒரு பண்பாடற்ற அரசியல் செய்து வருகிறார். தந்தை பெரியார், அண்ணா போன்ற தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பல தலைவர்களை அண்ணாமலை அவதூறாக பேசி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியா கூட்டணியை சீர்குலைக்க பல்வேறு சாகசங்களை பாஜ செய்து வருகிறது. மதவெறி ஆட்சியை அகற்ற இந்தியா கூட்டணி இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பண்பாடற்ற அரசியல் செய்யும் அண்ணாமலை: பாலகிருஷ்ணன் கண்டனம் appeared first on Dinakaran.
