மனுவை விசாரித்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நீதிபதி குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்ததை நீதிமன்றத்தின் கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றபோது ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துள்ளார். ஆர்.எஸ்.பாரதியின் கருத்துகள் நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இல்லை. அது நீதிமன்ற அவமதிப்பு செயல் ஆகாது. எனவே, மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அனுமதி கோரியதில் முகாந்திரம் இல்லை. சங்கரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி: தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் உத்தரவு appeared first on Dinakaran.