இதுகுறித்து காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், சிறையில் உள்ள வாசன், தனது கையிலும் இடுப்பிலும் வலி இருப்பதாக ஜெய்லரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு டிடிஎப் வாசனை போலீசார் அழைத்து சென்றனர். பின்னர், சிறை வார்டில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழு உடல் பரிசோதனை செய்த பிறகு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என கூறப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். யூடியூபர் வாசன் இதுபோல் பைக் சாகசங்களில் ஈடுபட்டு பலமுறை விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
The post புழல் சிறையில் அடைக்கப்பட்ட யூடியூபர் டிடிஎப் வாசன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.