இதனிடையே பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் 9 காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கங்கள் கனடாவில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன என்று ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறியதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 8 தனி நபர்களுக்கு கனடா புகலிடம் வழங்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பஞ்சாப் பாடகர் கொலை உட்பட இந்தியாவில் நடந்த பல தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்தும் கோரிக்கையை அந்த நாட்டு அரசு இதுவரை கண்டு கொள்ளவில்லை என இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
The post இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் கனடா குடிமக்களுக்கு சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது அந்நாட்டு அரசு!! appeared first on Dinakaran.
