இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நெல்லூரை சேர்ந்த லட்ஷிதா(6) என்ற சிறுமி பெற்றோருடன் பாத யாத்திரையாக சென்றபோது நரசிம்மசுவாமி கோயில் அருகே சிறுத்தை, லட்ஷிதாவை இழுத்து சென்று கொன்றது. இதனால் வனத்துறையினர் கூண்டு வைத்து அடுத்தடுத்து 5 சிறுத்தைகளை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தைகள் திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா வன உயிரியியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதன்மை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி, திருப்பதி மலைப்பாதையில் மேலும் 5 சிறுத்தை சுற்றி திரிவதாக தெரிவித்தார்.
தையடுத்து திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை 330 கேமராக்கள் மூலம் வனத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில், நடைபாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாடுவது வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த பகுதியில் கூண்டு வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 6வது சிறுத்தையும் கூண்டில் சிக்கியது.
The post திருப்பதி மலைப்பாதை அருகே பக்தர்களை அச்சுறுத்தி வந்த 6வது சிறுத்தையும் கூண்டில் சிக்கியது!! appeared first on Dinakaran.
