நகரின் முக்கிய பகுதி ரோடுகளில் மாஸ் கிளீனிங் செய்ய எதிர்பார்ப்பு

 

கோவை, செப்.20: கோவை மாநகராட்சியில் எம்ஜிஆர் காய்கனி மார்க்கெட், அண்ணா மார்க்கெட், ராமர் கோயில் மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், காந்திபுரம் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் மற்றும் மாநகராட்சி வணிக வளாகங்களை பராமரிக்க நடப்பாண்டிற்கு சுமார் 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை, உரமாக்கும் பணிக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. போதுமான குப்பை தொட்டிகள் இல்லாததால் சில இடங்களில் காய்கனி, குப்பைகள் குவிக்கப்படுகிறது.

குறிப்பாக அழுகிய பழம், காய்கனிகளை தூக்கி வீசுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை முறையாக சேகரிக்க தேவையான இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்கவேண்டும். மார்க்கெட் வளாகத்திற்குள் கால்நடைகள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. மாடுகள் மேய விடாமல் தடுக்கவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்னர். நகரின் முக்கிய பகுதி ரோடுகளில் கழிவுகள் குவிந்துள்ளது. இவற்றை தினமும் அகற்ற வேண்டும். ஞாயிறு தினங்களில் மாஸ் கிளீனிங் பணி நடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

The post நகரின் முக்கிய பகுதி ரோடுகளில் மாஸ் கிளீனிங் செய்ய எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.