பிற்பகலில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய முதல் உரையில், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை முன்னெடுத்து செல்லும் வாய்ப்பை கடவுள் தமக்கு வழங்கி உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “மகளிர் இட ஒதுக்கீடு குறித்த விவாதம் நீண்ட காலமாக நீடித்தது. வாஜ்பாய் ஆட்சியில் பல முறை அந்த மசோதா கொண்டு வரப்பட்டது.ஆனால் மசோதாவை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லை. அதனாலேயே அந்த கனவு நிறைவேறாமல் இருந்து வந்தது.ஆனால் இந்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முன்னெடுத்துச் செல்ல கடவுள் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளார்,”என்றார். பிரதமர் மோடியின் உரையை தொடர்ந்து புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
The post மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை முன்னெடுத்து செல்லும் வாய்ப்பை கடவுள் எனக்கு வழங்கி உள்ளார் : பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.
