இந்தநிலையில் ஒன்றிய அரசு சார்பில் அக்டோபர் 15ம் தேதி வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும்படி மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 27ம் தேதி பிறப்பித்த உத்தரவில் செப்டம்பர் 15ம் தேதி வரை சஞ்சய் குமார் மிஸ்ரா பதவியை நீட்டித்து உத்தரவிட்டது. தற்போது அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனராக உள்ள 1993ம்ஆண்டு பேட்ஜ் ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவீனை அமலாக்கத்துறை பொறுப்பு இயக்குனராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது. அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். பீகார் மாநிலத்தை சேர்ந்தராகுல் நவீன் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குனரை முறைப்படி நியமனம் செய்யும் வரை இயக்குநரின் பொறுப்புகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வெளியேறினார் சஞ்சய் குமார் மிஸ்ரா அமலாக்கத்துறைக்கு புதிதாக பொறுப்பு இயக்குனர் நியமனம் appeared first on Dinakaran.