திபுதிபுன்னு வந்துட்டு, அண்ணாவை பற்றி தவறான கருத்து சொன்னா, எந்த தொண்டனும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டான். இனிமேலும் இதுபோன்று அண்ணாமலை பேசினால் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி, நடக்காத விஷயத்தை நடந்த மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறார். அண்ணாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் விஷயத்தை நிச்சயமாக ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். அண்ணா பற்றிய அண்ணாமலையின் கருத்தால் கூட்டணி கட்சிகளான அதிமுக – பாஜ இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post அண்ணா பற்றி பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை appeared first on Dinakaran.
