3 நாட்களாக சோதனை நடந்த நிலையில் அதிகாரிகள் ஸ்நாக்ஸ் மற்றும் சாப்பாடு ஏற்பாடுக்கு 2 டீம் வைத்திருந்தனர். அந்த டீம் வாங்கி வரும் ஸ்நாக்ஸ் நல்லா இருந்தால், அடுத்த இடத்தில் சோதனை செய்யும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வாங்கிய இடத்தை சொல்லி வாங்கி சாப்பிட அறிவுறுத்தினர். நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று தேடி, தேடி வாங்கி வர சொல்லி சாப்பிட்டுள்ளனர். இதனால் டிரைவர்கள் சாப்பாடு வாங்குவதையே முழுநேர பணியாக செய்தனர். புதுக்கோட்டையில் என்ன சாப்பாடு ஸ்பெஷல் என கூகுளில் தேடிய அதிகாரிகள் முட்டை மாஸ், கொத்து புரோட்டா ஆகியவற்றை இந்த 3 நாட்களில் அதிகம் முறை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதேபோல் மாலை நேரத்தில் சூடான சமோசா வாங்கி சாப்பிட்டிருக்கின்றனர். சைவ சாப்பாடு பிரியர்கள் புதுகை மகளிர் கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு ஓட்டலில் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
The post ‘புதுகையில என்ன ஸ்பெஷலோ வாங்கிட்டு வாங்க’ ரெய்டு நடத்த போனாங்களா… சாப்பாடு தேடி போனாங்களா… கூகுளில் தேடி ஆர்டர் செய்து வெளுத்து கட்டிய அமலாக்கத்துறை appeared first on Dinakaran.