சம்பவம் குறித்து முத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். 16 வயதான இவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். நீட் தேர்வுக்காக இங்குள்ள பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கிருந்து படித்து வந்தார். மாணவி அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக மாணவி எழுதிய எந்த குறிப்புகளும் கிடைக்கவில்லை. மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்,’என்றார். தற்போது இறந்த மாணவியை சேர்த்து நடப்பு ஆண்டில் மட்டும் 23 பேர் அந்த பயிற்சி மையத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் 15 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை: ஒரே ஆண்டில் 23 பேர் இறப்பு appeared first on Dinakaran.