வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள்: போலீசார் விசாரணை

 

பட்டிவீரன்பட்டி, செப். 13: பட்டிவீரன்பட்டியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்த கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி 4-வது வார்டு மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சவுந்தர், தங்கபாண்டியன் இவர்களுக்குச் சொந்தமாக கார்களை வீட்டின் முன்பாக நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களது கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: