இந்த புகாரின் அடிப்படையில் விஜயலக்ஷ்மி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 1ம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். சீமான் தன்னை 7 முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாக விஜயலக்ஷ்மி புகார் அளித்து இருந்த நிலையில், அதன் உண்மை தன்மையை அறிய கடந்த 7ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலக்ஷ்மிக்கு 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த நிலையில், சீமான் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே நடிகை விஜயலக்ஷ்மி புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜராக உள்ளார்.
The post கைது நெருக்கடி?… நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமான் மீது பாய்ந்தது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்! appeared first on Dinakaran.