வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் மாணவர்களின் சான்றிதழ், லேப்டாப் ஆகியவை சிக்கியுள்ளதால், அவற்றை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செப்டம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு அந்த இடத்தில் மாணவர்கள் ஆஜராக வேண்டும். அரசு மற்றும் கன்டோன்மென்ட் அதிகாரிகள் ஆஜராகி பூட்டை திறந்து சான்றிதழ்களை எடுக்க மாணவர்களை அனுமதிக்க வேண்டும். மாணவர்களின் சான்றிதழ் உள்ளிட்ட அவர்களது பொருட்களை எடுத்துக்கொண்டு, ஒப்புகை கையெழுத்திட்ட பிறகு கட்டிடத்தை மீண்டும் பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தில் இருக்கும் மாணவர்களின் சான்றிதழ், உடமை எடுக்க அனுமதி: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.
