மதுக்கரை நாச்சிபாளையத்தில் வணிகர் சங்கத்தின் சார்பில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

 

மதுக்கரை, செப்டம்பர்.11: மதுக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாச்சிபாளையம் சிக்னல் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் கேமரா பொருத்துவதற்காக நாச்சிபாளையம் வணிகர் சங்கத்தின் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் 4 கேமராக்கள் மதுக்கரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.

அதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் வணிகர் சங்க பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜ் தலைமையில் நாச்சிபாளையம் கிளை சங்க தலைவர் ராஜா என்கிற செந்தில்குமார் முன்னிலையில் மதுக்கரை காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் செந்தில் குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மதுக்கரை நாச்சிபாளையத்தில் வணிகர் சங்கத்தின் சார்பில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.