மொராக்கோ நிலநடுக்கம் – பலி 1,000ஐ தாண்டியது

ராபட்: மொராக்கோ மாரகேஷ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 1,037ஆக உயர்ந்துள்ளது. மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 1,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

The post மொராக்கோ நிலநடுக்கம் – பலி 1,000ஐ தாண்டியது appeared first on Dinakaran.

Related Stories: