இதனிடையே டெல்லியில் உள்ள குடிசை பகுதியில் தடுப்பு மூலம் மறைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் G-20 மாநாட்டிற்காக டெல்லியில் குடிசை பகுதிகள் திரையிட்டு மறைக்கப்பட்டதற்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து X வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்; “ஏழை மக்களையும், விலங்குகளையும் இந்திய அரசு மறைக்கிறது; இந்தியாவின் உண்மை நிலையை விருந்தாளிகளிடம் இருந்து மறைக்க வேண்டிய அவசியமில்லை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post இந்தியாவின் ஏழ்மை நிலையை ஒன்றிய அரசு மறைக்க முயற்சி செய்கிறது: ராகுல் காந்தி appeared first on Dinakaran.