குழித்துறை மாற்றுத்திறனாளி பள்ளி

களியக்காவிளை: குழித்துறை ஹோம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் டென்னிஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் மாலா வரவேற்றார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை அஜீஸ்குமார் ஆசிரியர்களின் தியாகம் குறித்து பேசினார். ஆசிரியை ஜென்னின்ஸ், அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

The post குழித்துறை மாற்றுத்திறனாளி பள்ளி appeared first on Dinakaran.

Related Stories: