இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளி வாயிலில் இருந்து எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை மனிதச் சங்கிலி உருவாக்கம் மற்றும் மாணவர் பேரணி நடைபெற்றது. சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் பொது உரை நிகழ்த்தினர். பின்னர் மாணவர்களின் மைம் நிகழ்ச்சி நடைபெற்றது. “சமூக ஊடகங்கள் அவசியமான தீமை, சமூக ஊடகங்களின் இருண்ட பக்கங்களால் அமைக்கப்படும் பொறிகளுக்கு இளைய தலைமுறையினர் பெரும்பாலும் இரையாகின்றனர். எங்கள் இளைய தலைமுறையைக் காப்பாற்றவே இதை ஏற்பாடு செய்தோம்.”, என்று விஷுவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவர் சீனிவாசன் கூறினார்.
The post திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் சமூக ஊடகத்திற்கு எதிரான விழிப்புணர்வு appeared first on Dinakaran.