இந்நிலையில் நேற்று காலை சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜாராம் தலைமையில் கவுன்சிலர் கார்த்திக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்தனர். அங்கு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தில் சுமார் 750 அடி நீளமுள்ள மதில் சுவரை இடித்து, மாநகராட்சி இடத்தை மீட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட இடத்தில் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் வகையில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மாநகராட்சி இடத்தில் தனியார் அமைத்த மதில்சுவர் அகற்றம் appeared first on Dinakaran.
