இதுதொடர்பாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தை சார்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் வி.சரவணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சோமு. ராஜசேகர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் மற்றொரு அறிவிப்பில்,”திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், மாவட்ட பொது செயலாளர் பி.பொன்பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர் கே.எம்.ஆர்.முத்துராஜ் ஆகியோர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து முழுமையாக அறிக்கை அளிக்கும் வரை கட்சியின் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
மாவட்ட அமைப்பாளராக சக்ரவர்த்தி நியமனம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில்,‘திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவர் நியமனம் செய்யப்படும் வரை தற்பொழுது மாநில துணை தலைவராக செயல்பட்டு வரும் எம்.சக்ரவர்த்தி மாவட்ட அமைப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார். தற்போதுள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் அதே பொறுப்பில் தங்களது பணியினை மிகவும் சிறப்பான முறையில் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஸ்பாவில் பெண்ணிடம் சில்மிஷம் விவகாரம் பாஜ நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாக நீக்கம்: அண்ணாமலை உத்தரவு appeared first on Dinakaran.
