இதுகுறித்து குக்கி இன மக்கள் கூறியதாவது, “பல ஆண்டுகளாக நியூ லம்புலேன் பகுதியில் வசித்து வருகிறோம். மாநில உள்துறை அறிவுறுத்தலின்படி ஆயுதம் தாங்கிய சீருடை அணிந்த காவல்துறையினர் செப்டம்பர் 1,2 தேதிகளில் இரவு நேரத்தில் வந்து இங்கிருந்தால் பாதுகாப்பு இல்லை என கூறி, எங்களை வலுக்கட்டாயமாக வௌியேற்றினர். நாங்கள் வீட்டில் வைத்திருந்த பொருட்களை எடுக்க கூட நேரம் தரவில்லை. கட்டிய ஆடையுடன் சென்று விட்டோம்” என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
தனியாக பிரித்து விட கோரிக்கை: வலுக்கட்டாய வௌிேயேற்றத்தால் குக்கி இன மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து குக்கி பழங்குடியினரின் குக்கி இன்பி மணிப்பூர் வௌியிட்டுள்ள அறிக்கையில், “குக்கியும், மெய்டீஸ் சமூகத்தினரும் ஏற்கனவே பிரிந்து உள்ளோம். அரசியலமைப்பு ரீதியாக இந்த பிரிவை அங்கீகரிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர்.
The post இம்பாலில் இருந்து 10 குக்கி குடும்பங்கள் வலுக்கட்டாயமாக வௌியேற்றம்: போலீஸ் நடவடிக்கையால் சர்ச்சை appeared first on Dinakaran.