மேலும் சென்னை புறநகர் பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் சேவைக்கு இணையான சேவையை வழங்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை எடுக்க உள்ளது. அதன்படி, மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.அதே போல் இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி , பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களும் மேம்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு எடுத்துள்ளது. மேலும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் டெண்டர் விட்டு பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
The post சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு!! appeared first on Dinakaran.
