தேவகோட்டை அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை

தேவகோட்டை, ஆக. 31: தேவகோட்டை அருகே குமாணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகலிங்கம் (58). இவரின் மனைவி சாந்தியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நாகலிங்கம் அக்கம் பக்கத்தில் நிறைய கடன் பெற்றுள்ளார். கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. அதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தனது வயலில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது
தகவலறிந்து வந்த திருவேகம்பத்தூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தேவகோட்டை அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: