காரமடையில் கனமழை

காரமடை,ஆக.31:காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயில் போலவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.இந் நிலையில் நேற்று காலை முதலே சூரியன் சுட்டெரித்து வந்த வேளையில் பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் இருட்ட துவங்கியது.இதனால் இதமான சூழல் நிலவியது.இந்நிலையில் திடீரென மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரமடை நகரப்பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கனமழையின் காரணமாக காரமடை – தோலம்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே கேட் அருகே மரம் ஒன்று அருகே இருந்த மின்கம்பத்தின் மீது சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன்,மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து மின்வாரிய உதவி பொறியாளர் மகாலிங்கம், நெடுஞ்சாலைத்துறையினர்,காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தினை அகற்றினர்.இதனால் காரமடை – தோலம்பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதேபோல் தோலம்பாளையம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.மேலும், ஆலங்கட்டி மழையும் பெய்ததால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். புட் நோட் MTP04,05 – காரமடை நகரப்பகுதியில் காற்றுடன் பெய்த கன மழை காரணமாக தோலம்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே கேட் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.

The post காரமடையில் கனமழை appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.