நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

நெல்லிக்குப்பம், ஆக. 29: நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக மகேஸ்வரி பணியாற்றி வந்தார். இவர் பணி மாறுதலாகி கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி தேர்வு நிலை நகராட்சிக்கு ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அதன்பேரில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு கோயில்பட்டி நகராட்சி மேலாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணராஜன் பணி உயர்வு பெற்று நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணராஜன் நேற்று நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக பதவி ஏற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ஆணையாளர் கிருஷ்ணராஜன் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கிரிஜா திருமாறன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் புதிய ஆணையர் கிருஷ்ணராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: