உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு உறுப்பினராக ப.சிதம்பரம் நியமனம்: மாநிலங்களவை தலைவர் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழுவின் உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு உறுப்பினராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் 24 துறைகளை சேர்ந்த நிலைக்குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 31 உறுப்பினர்கள் (21 மக்களவை உறுப்பினர், 10 மாநிலங்களவை உறுப்பினர்) உள்ளனர். நாடாளுமன்ற உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் உறுப்பினரான பி.பட்டாச்சார்யா (காங்கிரஸ்) ஓய்வு பெற்றதையடுத்து அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவை தலைவரான ஜகதீப் தன்கர், நாடாளுமன்ற உள்துறை குழுவின் உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரத்தை அவர் நியமனம் செய்துள்ளார். காங்கிரசின் மக்களவை எம்பியான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உள்துறைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். மேலும் எட்டு துறைகளுக்கான (உள்துறை, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, வெளியுறவு, நிதி மற்றும் சுகாதாரம்) நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மீண்டும் அமைக்கப்பட்டதாக மாநிலங்களவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

The post உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு உறுப்பினராக ப.சிதம்பரம் நியமனம்: மாநிலங்களவை தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: