அகில இந்திய கூடைப்பந்து போட்டி

 

கோவை, ஆக.28: 57-வது பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியம் அருகே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறு வருகிறது. பல்வேறு அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் இரண்டாம் நாள் முதல் போட்டியில் வருமான வரித்துறை அணியை எதிர்த்து கேரளா போலீஸ் அணி விளையாடியது. இதில் வருமான வரித்துறை அணி 85 – 65 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியன் வங்கி அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 78 – 67 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாவது போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து பாங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 77 – 76 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. நான்காவது போட்டியில் இந்திய இராணுவ அணியை எதிர்த்து சுங்க துறை அணி விளையாடியது. இதில் இந்திய இராணுவ அணி 85 – 75 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. இத்தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியன் வங்கி, இந்திய கப்பல் படை, வருமான வரி மற்றும் இந்திய ராணுவ அணிகள் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அகில இந்திய கூடைப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: