இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள். மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி, 80 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனை அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் சே உறுதிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடகாஸ்கர் நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, ஒரு நிமிடம் அமைதி காக்கும்படி கேட்டு கொண்டார் என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
The post மடகாஸ்கரில் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் சோகம்: மைதானத்தில் திடீர் நெரிசல் 13 பேர் பலி; 80 பேர் காயம் appeared first on Dinakaran.