சமயநல்லூர் குறுவட்ட தடகள, குழு போட்டி மதுரை சிஇஓஏ பள்ளி சாம்பியன்

மதுரை, ஆக. 26: தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் சார்பாக சமயநல்லூர் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளை செவன்த் டே மேல்நிலைப்பள்ளி ஏற்று நடத்தியது. 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்குபெற்ற தடகள போட்டிகளில் மாணவர் பிரிவில் 159 புள்ளிகளும், மாணவியர் பிரிவில் 127 புள்ளிகளும் மொத்தமாக 286 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், குழு போட்டிகளிலும் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தையும் மதுரை கோசாகுளம் சி.இ.ஓ.ஏ. மேல்நிலைப்பள்ளி பெற்றது.

14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் அனாஸ் VIII-C, 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ஆதில் அப்துல் ரஹ்மான் XII-E1, மாணவியர் பிரிவில் பூஜா  XII-D1 ஆகியோர் தனிநபர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர். மதுரை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணாக்கர்களை சி.இ.ஓ.ஏ. கல்வி குழுமத்தின் நிறுவன தலைவர் இராஜா கிளைமாக்சு, தலைவர் சாமி, துணை தலைவர்கள் சவுந்தரபாண்டி, பாக்யநாதன், முதன்மை முதல்வர் கலா, முதல்வர் கவுரி, உடற்கல்வி இயக்குனர் செல்லமுருகன் ஆகியோர் வாழ்த்தினர்.

The post சமயநல்லூர் குறுவட்ட தடகள, குழு போட்டி மதுரை சிஇஓஏ பள்ளி சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: