சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கவுரி மீது நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள் பேரவை கோரிக்கை

சென்னை: சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கவுரி மீது நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளனர். முறைகேடுகளில் கவுரி ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு பேராசிரியர்கள் பேரவை கோரிக்கை வைத்துள்ளனர். பல்கலை. விதிகள், பல்கலை. சட்டம், ஆட்சி மன்றக் குழுவை மீறி முன்னாள் துணைவேந்தர் கவுரி செயல்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆட்சி மன்ற குழு, கல்விக் குழு கூட்டத்தில் மாணவர்கள், கல்லூரி பிரச்சனைகளை எழுப்ப விடாமல் தடுத்தவர் கவுரி என்று பேரவை கூறியுள்ளது.

The post சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கவுரி மீது நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள் பேரவை கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: