சேலம் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு திருவாரூரில் இருந்து 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு

 

திருவாரூர், ஆக. 25: திருவாரூரில் இருந்து சேலம் மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் 2022, 23 பருவத்தில் குறுவை, சம்பா மற்றும் கோடை நெல் சாகுபடியை அடுத்து விவசாயிகளிடமிருந்து 8 லட்சத்து 50 ஆயிரம் மெ.டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவைகளிலிருந்து தினமும் சுமார் 1000 டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காகவும், அரிசி மற்றும் நெல்கள் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து சேலம் மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 21 வேகன்களில் 1,250 டன் அரிசி மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

The post சேலம் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு திருவாரூரில் இருந்து 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: