இதில், கட்சிகள் இடையே நேரடி போட்டி சம்மந்தமான பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் ஆராயப்படும். இதற்கிடையே, சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சட்டீஸ்கரில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மாநிலத்தில் ஆளும் காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இதனால் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கெஜ்ரிவாலிடம் நேற்று நிருபர்கள் கேட்ட போது,‘‘மும்பை கூட்டத்தில் கலந்து கொள்வேன். முடிவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன்’’ என்றார்.
The post இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டத்தில் பங்கேற்பேன்: கெஜ்ரிவால் உறுதி appeared first on Dinakaran.
