இந்நிலையில் நேற்றிரவு மதுக்கடைக்கு சென்று மேலும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சிலம்பரசன், தந்தை இளங்கோவனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மிக கோபமடைந்த சிலம்பரசன், வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து வந்து தந்தை இளங்கோவனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் முகம், உடல் உள்பட பல இடங்களில் படுகாயமடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த பாப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த இளங்கோவனின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பியோடிய சிலம்பரசனை தேடி வருகின்றனர். குடிபோதையில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கறி அதிகம் வைக்காததால் ஆத்திரம் தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன் appeared first on Dinakaran.