உள்நாட்டில் தயாரான ஐஎன்எஸ். விந்தியகிரி, கப்பல் கட்டும் திறனில் தற்சார்பு இந்தியாவின் அடையாளமாக விளங்குகிறது. இந்தியா இன்று உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. எதிர்காலத்தில் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற அரசு முயற்சித்து வருகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பது அதிக அளவிலான வர்த்தகமாகும். இந்தியாவில் உற்பத்தியாகும் வர்த்தகப் பொருட்களில் பெரும்பகுதி கடல்கள் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. இது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்விற்குப் பெருங்கடல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் மிகப் பெரிய இந்தோ-பசிபிக் பிராந்தியம் பல அம்சங்களைக் கொண்டுள்ளன. இதில் இந்தியாவின் கடல்சார் நலன்களை இந்திய கப்பற்படை பாதுகாத்து வருகிறது,’’ என்று கூறினார்.
The post கப்பல் கட்டுவதில் ஐ.என்.எஸ். விந்தியகிரி தற்சார்பு இந்தியாவின் அடையாளம்: ஜனாதிபதி முர்மு பெருமிதம் appeared first on Dinakaran.