சிம்லா : இமாச்சல பிரதேசம்: கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, ஃபகில், சம்மர் ஹில் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களில், 57 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை கனமழை, நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71-ஆக உயர்ந்துள்ளது.