சுவஸ்திக் வடிவில் நான்கு மூலைகளைக் கொண்டதாக உள்ள இந்த கிணற்றின் நான்குபுறங்களிலும் கீழிறங்க படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நான்கு புறங்களிலிருந்து கிணற்றின் உள்ளே செல்வதற்கு அமைக்கப்பட்ட படிகளில் பல்லவர் கால எண்கள் 1 முதல் 10 வரை இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படிக்கட்டுகள் 3 படிநிலைகளாக அமைந்துள்ளதோடு பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளதோடு கிணற்றின் மேல் பரப்பு சுவரிலும் கல்வெட்டுகள் நிறைந்திருக்கின்றன. அதன் மேல் ஆங்காங்கே நந்தி, நாகர் போன்ற சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கிணறு கி.பி. 800ம் ஆண்டில் பல்லவ மன்னன் தந்திவர்மன் ஆட்சிக்காலத்தில் கம்பன் அரையன் என்பவரால் உருவாக்கப்பட்ட கிணறு என்று தொல்லியியல் துறையின் தகவல் குறிப்பு சொல்கின்றது. தந்திவர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றான மார்பிடுகுப் பெருங்கிணறு என அறியப்பட்ட விஷயமும் இக்கிணற்றில் சுற்றிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
The post திருவெள்ளறை சுவஸ்திக் கிணறு :நவீன கட்டுமானத்துக்குச் சான்று appeared first on Dinakaran.
