மா.நன்னன் நூல்கள் நாட்டுடைமை; நூலுரிமை தொகை ரூ10 லட்சத்தை அவரது மனைவியிடம் முதல்வர் வழங்கினார்

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேராசிரியர் மா.நன்னனின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரின் துணைவியார் ந.பார்வதியிடம், நூலுரிமை பரிவுத் தொகையான ரூ10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, நன்னன் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது துணைவியார் ந.பார்வதியிடம் நூலுரிமை பரிவுத் தொகையான ரூ10 லட்சத்துக்கான காசோலையை, தலைமை செயலகத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

The post மா.நன்னன் நூல்கள் நாட்டுடைமை; நூலுரிமை தொகை ரூ10 லட்சத்தை அவரது மனைவியிடம் முதல்வர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: