இதுகுறித்து ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்கள் கூறுகையில், ‘மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அடுத்த லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பல்வேறு வழிகளில் முறைகேடு செய்யும் முயற்சியை பாஜக தொடங்கியுள்ளதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் சமீபத்தில் கூறினார். வாக்குப்பதிவு இயந்திர தொழில்நுட்பத்தில் குளறுபடி ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், மம்தா பானர்ஜியின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, இடது சாரிகள் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்தக் குழுவில் கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல்), சீதாராம் யச்சூரி (மா.கம்யூ) ஆகியோர் இடம்பெறலாம். மாநிலம் வாரியாக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் மும்பையில் நடக்கும் விரிவான ஆலோசனைக்கு பிறகுதான் ஒருங்கிணைப்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இவ்விவகாரத்தில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோரின் கருத்தின் அடிப்படையில் தான், ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? என்பதை இறுதிசெய்ய முடியும்’ என்று கூறினர்.
The post மும்பையில் 3வது ஆலோசனை கூட்டம் ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்?: 11 பேர் குழு, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.