விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் அழகு சாதனப் பொருட்கள், சுடுமண் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் 2-ம் கட்ட அகழாய்வு பணியில் 3,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுடுமண் சல்லடை, மூடியுடன் கூடிய சுடுமண் பானை, உருண்டை வடிவிலான அரைக்க பயன்படுத்தும் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.